tag:blogger.com,1999:blog-25681624273090706832024-02-08T04:42:32.502-08:00Vaasiyogam | Madurai Sinthamani | Sivaguru Sivasiddhan | Shree Vilvam Yoga CentreSivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-70675496614090516822010-11-24T07:54:00.000-08:002010-11-24T07:55:33.903-08:00ஒரு வானம்… மூன்று சூரியன்கள்!நமது பூமியில் இருந்து 149 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் `எச்.டி. 188753′ என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோள கிரகம் மிக நெருக்கமாக மூன்றரை நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்தக் கிரகம் சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்துகொண்டிருக் கிறது.<br /><br /><br /><br />இந்தக் கிரகம் வலம் வந்துகொண்டிருக்கும் மைய நட்சத்திரத்தை, வேறு ஒரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரட்டை நட்சத்திரங்கள், சூரியனை சனி- யுரேனஸ் கிரகங்கள் சுற்றிவரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுகின்றன. இந்தக் கிரக அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் `விண்வெளி சர்க்கஸ்’ என்று அழைக்கின்றனர்.<br /><br /><br /><br />மேலும், இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன. பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும், தொலைவில் வலம் வந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன. எனவே இந்த வாயுக்கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும். மேலும் மூன்று சூரியன் களும் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று வெவ்வேறு நிறங்களில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சிஅளிக்கும். தினமும் மூன்றுமுறை சூரிய உதயங்களும், அஸ்தமனங்களும் நிகழும். அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-16245179013700295062010-10-31T02:28:00.001-07:002010-10-31T02:28:45.796-07:00குணங்கள்நவரெத்தினங்களின் குணங்கள்<br />முத்து _ நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் _ கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றர்ல குதிரை தும்மும். பச்சைக்கல் _ குத்து விளக்கு முன்பு (ஒளியின்) காண்பித்தால் சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் _ சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம்: உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் _ பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும் வைடூரியம் _ பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் _ பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-6151600822878749832010-09-27T23:08:00.001-07:002010-09-27T23:08:40.491-07:00மாணிக்க வாசகர்சுந்தரமூர்த்தி<br /><br />திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையர், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதை வாங்கிப்படித்த சுந்தரர் ,”இது பொய் என் பாட்டனார் எழுதிகொடுத்தது செல்லாது உனக்கென்ன பித்தா ? என்ன உளருகிறாய் என அந்த ஓலையை கசக்கிக் போட்டார் இனி உன்னிடம் ஆதாரம் இல்லை போ “;என்றார் உடனே முதியவர்,” நான் கொண்டுவந்தது படி ஓலை அசல் அங்கு வைத்திருக்கிறேன் இவன் இந்த படி ஓலையை நறுக்கிப் போட்டப்பவே தெரிந்திருக்கலாம்உண்மையை மறைக்கிறான் என்று ஆகவே இந்த அடிமையை என்னை கேட்காமல் திருமணம் செய்யக்கூடாது “; என்றார் அங்கிருந்தவர்களும்,” ஆமாம் முதியவர் சொல்வதில் ஞாயம் உள்ளது” என்றனர்.சரி பித்துப்பிடித்தவனே எங்கே மூலப் படி என சுந்தரமூர்த்தி கேட்க அதை நான் அங்கு வைத்திருக்கிறேன் வா என்னுடன் என, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். அசரீரியாக தன்னைப்பற்றிப் பாட சொல்ல என்னபாடுவது என கேட்க தன்னைப் பித்தனே என்று சொன்னாயே அதையே பாடு என்றாராம் சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.<br /><br />சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.<br /><br />இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.<br /><br />இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.<br /><br />மாணிக்கவாசகர்<br /><br />இறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது, திருவாசகம்.<br />இதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும்.<br /><br />வரலாறு<br /><br />இவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் “தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்”. சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.<br /><br />காலம்<br /><br />இவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சுந்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர்.<br /><br />பாண்டிய அமைச்சர்<br /><br />இவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப் பாண்டிய மன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான். தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான்.<br /><br />ஆன்மீக நாட்டம்<br /><br />அரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.<br /><br />குதிரைக் கொள்முதல்<br /><br />ஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரசீகக் குதிரைகள் முதன்மை பெற்றன.<br /><br />ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த “திருப்பெருந்துறை” என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, “சிவ சிவ” என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார்.<br /><br />தடுத்தாட்கொள்ளல்<br /><br />அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு “மாணிக்கவாசகன்” என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டு விட்டார்.<br /><br />குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.<br /><br />நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்<br /><br />மாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப் பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் “சொக்கராவுத்தரெ”ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின.<br /><br />மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். வைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல்<br />அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின் மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப் போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.<br /><br />சைவத்தொண்டு<br /><br />மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் “சிவபுராணம்”, “திருச்சதகம்” முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் “திருவெம்பாவை”, “திருவம்மானை” ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.<br /><br />அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமை மகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச் செய்த விடைகளே, “திருச்சாழல்” என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் “அச்சோப்பதிகம்” போன்ற சிலவற்றைப்பாடினார்.<br /><br />பாவையும் கோவையும்<br /><br />ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், “பாவை பாடிய வாயால், கோவை பாடுக!”, என்று கேட்டுக் கொண்டான்.<br /><br />ஈசன் எழுதிய ஏடு<br /><br />மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், “இவை திருச்சிற்றம் பலமுடையான் எழுத்து”, என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.<br /><br />வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.<br />அவனே அதற்கு அர்த்தம்<br /><br />மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, “அந்நூலின் பொருள் இவனே!”, என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-51620022185332467952010-09-24T07:59:00.001-07:002010-09-24T07:59:42.861-07:00எலுமிச்சம் பழம்* எலுமிச்சம் பழச் சாறு தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் பானம் தாகத்தை தணிக்க மிகச்சிறந்த மலிவான பானம். இது புத்துணர்வு ஊட்டுகிறது ஈரலை சுத்தப் படுத்துகிறது.<br /> * வைட்டமின் C நிறைந்தது.<br /> * கோடை வெப்பத்தாலும் உடல் நலக் குறைவாலும் ஏற்படும் நீரிழப்பை ஈடு கட்ட எலுமிச்சை ஜூஸ் நல்லது. வயிற்றுப் போக்கால் உடலில் உள்ள நீரும் தாதுக்களும் குறையும் போது,நிறைய தண்ணீரில் எலுமிச்சப் பழச் சாறும் சிறிது உப்பும்,ஒரு சிட்டிகை சோடா உப்பும் கலந்து அருந்துவது நீர் தாது இழப்பை ஈடு கட்டும்.<br /> * எலுமிச்சம் பழம் பண்டைய காலத்தில் காயங்களை ஆற்றவும், பல்வேறு விஷ முறிவாகவும் பயன் பட்டது.<br /> * சாதாரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தில் மூன்று மேஜைக்கரண்டி சாறு இருக்கும். இதனை சாறு பிழிவதற்கு முன் சில வினாடி மைக்ரோ வேவ் அவனில் வைத்து எடுத்து சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.<br /> * எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலச்சத்து மீன் உணவிலிருந்து வாடையை வெளிப்படும் amines களை ஆவியாகாத ammonium உப்புக்களாக மாற்றி விடுகிறது.எனவே மீன் உணவுகளின் வாடையை போக்குவதற்கு எலுமிச்சை சாறு நல்லது.<br /> * சமைப்பதற்கு முன் மாமிசத்தில் எலுமிச்சை சாறு தடவுவது மாமிசத்தை மென்மையாக ஆக்கும்.<br /> * கிரீஸ்,மற்றும் கறைகளை நீக்குகிறது.<br /> * கிருமிகளை ஒழித்து துர்நாற்றத்தை போக்குகிறது.<br /> * எலுமிச்சைத் தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் இயற்க்கையான பூச்சிக்கொல்லியாகப் பயன் படுகிறது.<br /> * முடியை செம்பட்டை யாக்க உதவுகிறது.முடி கொட்டுவதை தடுக்கும்<br /> * சருமத்தை வெளுப்பாக்கவும் உதவுவதாக நம்பப் படுகிறது.<br /> * எலுமிச்சை சற்றில் pH அளவு குறைவாக இருப்பதால் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல் படுகிறது.<br /> * எலுமிச்சைச் சாறு முகப்பருவுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. முகத்திற்கு புத்துணர்வு ஊட்டும். அதோடு சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி் சிறிது நேரம் களித்து முகம் கழுவி வர தோல்சுருக்கம் , கரும்புள்ளிகள், நீங்கி முகம் பளபளக்கும்.<br /> * எலுமிச்சையின் நறுமணம் புத்துணர்வு தருகிறது.<br /> * எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி உப்பு அல்லது,சோடாப் பொடியில் முக்கி செம்புப் பாத்திரங்களைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.<br /> * எலுமிச்சையில் உள்ள மெக்னீசியச்சத்து கால்சியத்துடன் சேர்ந்து இரத்ததில் ஆல்புமினை உருவாக்கப் பயன் படுகிறது.<br /> * எலுமிச்சையிலுள்ள அனேகத் தாதுப்பொருட்கள் பித்த வாந்தி,இருமல்,ஈரல் கோளாறு, போன்ற நோய்களை குணமாக்க உதவுகிறது.<br /> * தொண்டை வலிக்கு எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து அடிக்கடி வாய்க் கொப்பளிக்க குணமாகும்.<br /> * நகச்சுற்று , பருக்கள் போன்றவற்றில் எலுமிச்சம் பழத்தை வெட்டி க் கட்டி வைத்தால் சீழ் வெளியேறும் வலி குறையும்<br /> * அரை கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது.வயிற்றுப் பொருமல், போன்ற ஜீரணக் கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுப் புண்ணைக் நீக்கும்<br /> * அதிக மாத விடாய்,மற்றும் இரத்தப்போக்கிற்கு எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்தி வர நிற்கும்.பேதி, சீதபேதி, இரத்தபேதி, இரத்தப் போக்கு ஏற்பட்டால் காய்ச்சிய நூறு மில்லி பாலில் பாதி எலுமிச்சம் பழச் சாறு கலந்து, வடிகட்டியபாலை மட்டும் குடிக்கவும். நோய் விரைவில் கட்டுப்படும்<br /> * ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு மணிக்கொருமுறை எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்த scurvy நோய் குணமாகும்.<br /> * தூக்கமின்மையை நீக்கும்.<br /> * அஜீரண வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை சாறு நல்லது.<br /> * மயக்கத்தை நீக்கும், பித்தத்தைத் தணிக்கும்.<br /> * மூல நோய், மற்றும் வயிற்றுக் கடுப்பைப் போக்கும்.<br /> * புதிதாகப் பிழிந்த எலுமிச்சை சாற்றை இளநீரில் கலந்து கொடுத்துவர டைபாய்டு காய்ச்சலில் குணம் தெரிவதுடன் வாந்தி உணர்ச்சியும் குறையும்.<br /> * இரண்டு துளி எலுமிச்சை சாற்றை காலை மாலை காதில் விட்டு வந்தால் காது குடைச்சல் தீரும்.<br /> * எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை, கட்டுப்படும்.<br /> * கண் நோய்கள் நீக்கும்.<br /> * நூறு மில்லி நீரில் பாதி எலுமிச்சை சாறும் சிறிதளவுஉப்பு சேர்த்து குடிக்க காம உணர்வு குறையும்.<br /> * எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒருவேளை வீதம் தொடர்ந்துகுடிக்க காசம் கட்டுப்படும்.<br /> * உடல் எரிச்சல் தோல் வறட்சி உள்ளவர்கள் குளிக்கும் நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்த்து குளித்தால் நலமாகும்.<br /> * உணவில் தவறாமல் எலுமிச்சைச் சாறு, வல்லாரைக் கீரை அல்லது மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய வற்றை சேர்த்துக்கொள்வது வெண் புள்ளிகளை குணமாகும்.<br /> * மூத்திரப் பிரச்சினையய் சரியாக்கும்<br /> * நீரிழிவைத் தணிக்கும்.<br /> * வாய் நாற்றம் நீங்கும்.பல் ஆட்டம் நிற்கும்.<br /> * தூக்க ஸ்கலிதத்தை நீக்கும்.<br /> * எலுமிச்சை சாறும் ,தேனும் சம பங்கு எடுத்து இருமல் மருந்தாக உபயோகிக்கலாம்.<br /><br />பாதக அம்சம்:<br /><br /> * அளவுக்கு அதிகம் அருந்துவது பல் எனாமலை தேய்க்கும்.<br /> * அதிக காய்ச்சலின் போது அருந்த நிலமை மோசமாகும்.<br /> * மருந்துண்ணும் நாளில் மருந்தின் சக்தியை குறைக்கும்.<br /> * சிறு குழந்தைகளுக்கு ஆகாது.<br /> * ஆஸ்துமாவிற்கு ஒத்துக்கொள்வதில்லை.<br /> * வாத நோய்க்கும் சளிக்கும் ஆகாது.<br /> * மாத விலக்கு நாட்களில் குளிரும் காய்ச்சலும் உண்டாக்கும்.<br /> * விந்து உறுதியை தளர்த்தும்<br /><br />எலுமிச்சையிலுள்ள சத்துக்கள்:<br />நீர் --- 48.6 gm<br />புரதம் --- 1.5 gm<br />கொழுப்பு --- 1.0 gm<br />தாது உப்புக்கள் ---- 0.7 gm<br />நார் சத்து ---- 1.3 gm<br />சர்க்கரை ---- 10.9 gm<br />சக்தி ---- 59K Cal<br />சுண்ணாம்பு ---- 90 mg<br />பாஸ்பரஸ் ---- 20 mg<br />இரும்பு ---- 0.3 mg<br />மாவு --- 15 Ug<br />தையமின் --- 0.02 mg<br />ரிபோஃப்லெவின்-- 0.03 mg<br />நியாசின் ---- 0.1 mg<br />வைட்டமின் C --- 63mg<br /><br />லெமன் ஜூஸ் செய்முறை:<br /><br /> * இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து நன்றாக சாறு பிழியவும்.<br /> * நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.<br /> * இரண்டு மேஜை கரண்டி சர்க்கரை ,கால் தேக்கரண்டி உப்பும் நன்கு கலக்கவும்.<br /> * தேவைப்பட்டால் ஃப்ரிஜ்ஜில் வைத்து அல்லது ஐஸ் கட்டி போட்டு பருகவும்.<br /><br />எலுமிச்சைத் தேன் ஜூஸ்:<br /><br /> * பாதி எலுமிச்சம் பழத்தை ஒரு கப் வெது வெதுப்பான நீரில் பிழிந்து,ஒரு தேக்கரண்டி தேன் விட்டு கலக்கி அருந்தவும்.<br /><br />இஞ்சி லெமனேட்:<br /><br /> * அரை அவுன்ஸ் தெளிந்த இஞ்சி சாற்றில் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு சிறிது உப்பு சேர்த்து அருந்தவும்.<br /><br />லெமன் சோடா:<br /><br /> * ஒரு எலுமிசம் பழத்தின் சாறெடுத்து அதில் 3 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் ஒரு சிட்டிகை சோடாப்பொடி போட்டு கலக்கிக் குடிக்கவும்.கடும் வயிற்று வலி பிரச்சனைகள் உடனே தீரும்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-84622046623388581532010-09-10T03:41:00.001-07:002010-09-10T03:41:54.177-07:00மாமிசம் மனித உணவு அல்ல!மாமிசம் மனித உணவு அல்ல!<br /> முட்டை, மீன், இறைச்சி, புழு முதலானவையும் மாமிசம் ஆகும்.)<br /><br />தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!<br />மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.<br /><br />மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.<br /><br />தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. “ஹார்ஸ் பவர்”என்று கூறுகிறோம். அந்த “ஹார்ஸ்” குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!<br /><br />இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?<br /><br />தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?<br />தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?<br /><br />தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.<br /><br />தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.<br /><br />இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.<br /><br />பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.<br /><br />ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-19280313344326469492010-08-23T02:46:00.000-07:002010-08-23T02:47:47.453-07:00சத்தமாக பாட்டு கேட்டால் ஆபத்துவாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது.<br /><br /> <br /><br />அதன் விவரம் வருமாறு:முதல் ஆய்வின்படி, இளைஞர்களிடம் காது கேளாமைக்கு அதிகமான ஒலி இறைச்சல்கள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களில் பாடல்கள் கேட்பது போன்றவை காரணம் என்று அறியப்பட்டது.<br /><br /> <br /><br />2005ம் ஆண்டின் போது செய்த ஆய்வில் ஐபாட், எம்பி3 பிளேயர்களில் தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தமாக பாடல்கள் கேட்கும் பழக்கத்தால் 5ல் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவதாக தெரிய வந்தது.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-74436253902296049972010-08-13T06:03:00.001-07:002010-08-13T06:03:55.900-07:00இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br />நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.<br /><br />நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.<br /><br />கொழுப்புச் சத்து<br /><br />கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.<br />கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy) என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.<br /><br />நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.<br />அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.<br /><br />கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.<br /><br />தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.<br /><br />அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.<br /><br />வனஸ்பதி<br /><br />தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.<br /><br />ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.<br /><br />அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.<br />எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-63898746237538566142010-08-07T01:29:00.000-07:002010-08-07T01:30:00.420-07:00வாழ்க்கை ஒரு வாய்ப்பு01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.<br />ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.<br />இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்<br />ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.<br />உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்<br />ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.<br />எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.<br />ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்<br />ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்<br />ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.<br />ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.<br />ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.<br /><br />02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.<br /><br />03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.<br /><br />04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.<br /><br />05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.<br /><br />06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.<br /><br />07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.<br /><br />08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.<br /><br />09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.<br /><br />10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.<br /><br />11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.<br /><br />12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.<br /><br />13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.<br /><br />14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.<br /><br />15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.<br /><br />16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.<br /><br />17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.<br /><br />18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.<br /><br />19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.<br /><br />20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !<br /><br />21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.<br /><br />22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.<br /><br />23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.<br /><br />24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.<br /><br />25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.<br /><br />26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.<br /><br />27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.<br /><br />28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.<br /><br />29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.<br /><br />30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-20737094436630938302010-07-16T03:20:00.000-07:002010-07-16T03:21:25.509-07:00உயர் இரத்த அழுத்தம்ஓர் ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய வயதுக் கேற்ப இருக்க வேண்டிய இயல்பான அளவைவிடக் கூடுதலாக இருக்கும் இரத்த அழுத்தமே, உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். தமனிக் குழாயில் (artery) பாய்ந்து செல்லும் இரத்தம், குழாயின் சுவர்ப்புறப் பரப்பின் ஓர் அலகில் ஏற்படுத்தும் அழுத்தமே (pressure in unit area) இரத்த அழுத்தம் எனப்படுகிறது.<br /><br />இரத்த அழுத்தம் இரண்டு எண்களால் ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வகுத்தல் போல பதிவு செய்யப்படுகிறது. மேலிருக்கும் எண் இரத்த ஓட்டத்தின் போது இதயச் சுருங்கியக்கத்தின் காரணமாக ஏற்படும் இரத்த அழுத்த (systolic pressure) அளவாகும்; கீழே இருக்கும் எண் இதய விரிவியக்கத்தின் காரணமாக (diastolic pressure) உண்டாகும் இரத்த அழுத்த அளவாகும். எடுத்துக்காட்டாக ஒருவரின் இரத்த அழுத்த அளவு 120/80 (மில்லி மீட்டர் பாதரச அளவு - mm Hg) எனக் கொள்வோம். இதயச் சுருங்கியக்கத்தின் போது அவருடைய இரத்த அழுத்தம் உயரளவான 120மி.மீ. பாதரச அளவும், விரிவியக்கத்தின் போது 80 மி.மீ பாதரச அளவும், உள்ளது எனப் பொருள்படும். ஒருவருடைய வயது, நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி, கடைபிடிக்கும் உணவுப் பழக்கம் ஆகியவையே அவரது இரத்த அழுத்ததில் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்.<br /><br />இரத்த அழுத்தத்தை அளவிடும் முறை<br />இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குருதி அழுத்தமானி (sphygmomanometer) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பாதரச அழுத்தமானியுடன் (Mercury Manometer) இணைக்கப்பெற்ற காற்றினால் உப்பும் ஒரு கச்சையை (inflatable cuff) நோயாளியின் தோளுக்குக் கிழே மேற்புறக் கையைச் சுற்றி நன்கு கட்டுவர். இதனால் கையிலுள்ள தமனிக் குழாய் அழுத்தப் பெற்று இரத்த ஓட்டம் தற்காலிமாகத் தடைபடுகிறது. அடுத்து உப்பிய கச்சையிலுள்ள காற்று வெளியேற்றப்படும். இதே வேளையில் இரத்த அழுத்தத்தை அளவிடுபவர், ஸ்டெதெஸ்கோப் எனப்படும் மார்பாய்வியை முழங்கையிலுள்ள மேற்கைத் தமனியில் வைத்து, அத்தமனி வழியே இரத்தம் செல்லத் துவங்கும் போது ஏற்படும் நாடித் துடிப்பு ஒலிகளைக் கூர்ந்து கவனிப்பார். தமனியில் ஏற்படும் அழுத்தம், கச்சையின் அழுத்ததை விட அதிகமாகும் வரை துடிப்பு ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். முதல் ஒலியின் போது ஏற்படும் அழுத்த அளவு, இதயச் சுருங்கியக்க அழுத்தமாகும்; இறுதியாகக் கேட்கும் ஒலியின் போது உண்டாகும் அழுத்த அளவு, இதய விரிவியக்க அழுத்தமாகும். நோயாளியின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இரத்த அழுத்தம் மும்முறை அளவிடப்படுதல் வேண்டும்; கடைசி அளவைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குறைந்தது அரை மணி முன்பு வரை, புகை பிடித்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்த அழுத்த அளவீடு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; எனவே இதைப்பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம் என்பதில் ஐயமில்லை.<br /><br />உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ?<br />இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயரளவிலேயே நிலையாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. இதனை ஹைப்பர்டென்ஷன் என ஆங்கிலத்தில் கூறுவர். இதயச் சுருங்கியக்க அழுத்தம் 160 மி.மீ பாதரச அளவுக்கும், இதய விரிவியக்க அழுத்தம் 95 மி.மீ. பாதரச அளவுக்கும் சமமாகவோ அல்லது கூடவோ இருந்தால் அந்நிலையை உயர் இரத்த அழுத்த நிலை எனக் கூறலாம் என்று உலக நல்வாழ்வு நிறுவனத்தின் (World Health Organization - WHO) நிபுணர் குழு கருதுகிறது. ஆனால் மருத்துவ அறிஞர்களிடையே, உயர் இரத்த அழுத்தத்தின் துவக்க நிலையை அறுதியிடுவதில் பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல், தடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான அமெரிக்கத் தேசிய இணைப்புக் குழுவினரின் ஆறாவது பொது அறிக்கை, இரத்த அழுத்தத்தைக் கீழ்க்கண்டவறு வகைப் படுத்துகிறது:<br />இரத்த அழுத்த வகைப்பாடு இதயச் சுருங்கியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) இதய விரிவியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு)<br /><br />உகந்த நிலை <120 <80<br /><br />இயல்பு நிலை <130 <85<br /><br />இயல்புக்கு மேற்பட்ட நிலை: 130 - 139 85 - 89<br /><br />உயர் இரத்தஅழுத்தம் நிலை 1: 140 - 159 90 - 99<br /><br />உயர் இரத்தஅழுத்தம் நிலை 2: 160 - 179 100 - 109<br /><br />உயர் இரத்தஅழுத்தம் நிலை 3: 180 - 209 110 - 119<br /><br /> <br /><br />உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல்<br /><br />உயர் இரத்த அழுத்தத்துக்கு ஆட்பட்ட ஒருவர், வாழ்நாள் முழுதும் அதனோடு வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். மேலும் உயர் இரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் இன்றி, உள்ளுறை நோயாகவே பெரும்பாலோரிடம் இருந்து வருகிறது; மிகச் சிலரிடம் மட்டுமே அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் உயர் இரத்த அழுத்தச் சோதனை நடத்துவது இன்றியமையாததாகும்.<br /><br />இதயத்துக்குக் கடுமையான கூடுதல் பணிச் சுமையை அளிப்பதால் உயர் இரத்த அழுத்தம் மிகவும் அபாயமானதாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்குமானால், உடலின் பல பகுதிகள் செயற்பாட்டை இழந்து, இறுதியில் இறப்பு தவிர்க்க முடியாததாகி விடும். எனவே துவக்க நிலயிலேயே இந்நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.<br /><br />முன்பு இதய விரிவியக்க அழுத்தமே, உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய காரணியாகக் கருதப்பட்டது; ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி இதய சுருங்கியக்க அழுத்தமே, இதயக் குருதி நாளம் சார்ந்த நோய்களுக்கு (cardiovascular morbidity) முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. தகுதியான மருத்துவரிடம் முறையான சிகிச்சையைப் பெறுவதன் வாயிலாக இந்நோயின் இன்னல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும்.<br /><br />உலக நல்வாழ்வுக் கழகப் புள்ளிவிவரப்படி நகரத்தில் வாழும் ஆண்களில் 1000 க்கு 60 பேரும், பெண்களில் 70 பேரும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது; கிராமப் புறங்களில் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் தமனி உயர் இரத்த அழுத்த நோய் (arterial hypertension) பொது மக்களின் நல்வாழ்வில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குவதாக உள்ளது எனலாம்.<br /><br />இந்த நோயானது, புவியியல் சார்ந்தும், மரபு வழிப்பட்ட பண்புகளைச் சார்ந்தும் இருப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. மேலும் குடும்பத்தில் வழிவழியாக இந்நோய் தாக்கும் என்றும் கருதப்படுகிறது.<br />உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்<br /><br />அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension): சாதாரணமாக 95% மக்களுக்கு இந்த வகையான உயர் இரத்த அழுத்தமே காணப்படுகிறது. இது வருவதற்கான அடிப்படைக் காரணமாக எதையும் கூறுவதற்கில்லை.<br /><br />துணைநிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension): ஏறக்குறைய 5% உயர் இரத்த நோயாளிகள் இவ்வகையில் அடங்குவர். இதற்கான சில அடிப்படைக் காரணங்கள் இருப்பதுண்டு. சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாளமில் சுரப்பிக் குறைபாடுகள், சில கருத்தடை மாத்திரைகள் ஆகியன உடலில் குருதிச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்; கருவுற்ற நிலையில், பெண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வதும் உண்டு.<br /><br />வெள்ளாடை உயர் இரத்த அழுத்தம் (White coat hypertension): மருத்துவரை வெள்ளை ஆடையில் கண்டவுடனே, தற்காலிகமாகத் திடாரென்று சிலருக்குத் தோன்றும் இரத்த அழுத்தம் இது. மருத்துவ மனையை அடைந்தவுடனே, அச்சம் காரணமாக உண்டாவது இவ்வகை இரத்த அழுத்தம். சுமார் 20% நோயாளிகளுக்கு இவ்வகை இரத்த அழுத்தம் உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர்.<br /><br />தீவிர உயர் இரத்த அழுத்தம் (Accelerated hypertension): அண்மையில் இருந்த உயர் இரத்த அழுத்தத்தைவிட, கூடுதலாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் உயர் இரத்த அழுத்த அளவாகும் இது. கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஒளி நரம்பின் இரத்த நாளம் சிதைவுற்று அதனால் உண்டாகும் கண்குமிழ் அழற்சியினோடு (papilledema) தொடர்புடையது இவ்வகைத் தீவிர உயர் இரத்த அழுத்தமாகும்.<br /><br />அபாயநிலை உயர் இரத்த அழுத்தம் (Malignant hypertension): கட்டுப்படுத்த முடியாத, கடுமையான சிக்கல் நிறைந்த உயர் இரத்த அழுத்த வகையாகும் இது. இந்நிலையில் இரத்த அழுத்தம் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும் (இதயச் சுருங்கியக்க அழுத்தம் 200 மி.மீ. பாதரச அளவுக்கும்,<br /><br />இதய விரிவியக்க அழுத்தம் 130 மி.மீ. பாதரச அளவுக்கும் கூடுதலான நிலையை அடைவதுண்டு.) அபாயநிலை உயர் இரத்த அழுத்தமானது, உடலுறுப்புகள் சிதைந்து சேதமடைதல், விழித்திரைக் குருதிப்போக்கு ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். எனவே இவ்வகை உயர் இரத்த அழுத்தத்திற்கு, நெருக்கடி நிலை மருத்துவச் சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது.<br /><br />இடர்க் காரணிகள் (Risk factors)<br />உயர் இரத்த அழுத்தமே பல்வேறு நோய்களுக்கான இடர்க்காரணியாக அமைகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான இடர்க் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தடுக்கக் கூடிய அல்லது மாற்றக் கூடிய இடர்க் காரணிகள்; மற்றொன்று தடுக்க இயலா இடர்க் காரணிகள்.<br /><br />தடுக்க இயலா இடர்க் காரணிகள் (Non-modifiable Risk Factors)<br /><br />அ) வயது: ஆண், பெண் இரு பாலருக்கும் வயது கூடக் கூட, இரத்தம் அழுத்தம் கூடுவதும் தவிர்க்க இயலாததாகிறது.<br /><br />ஆ) மரபு வழிக் காரணங்கள்: ஆய்வு முடிவுகளின்படி, இயல்பான இரத்தம் அழுத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில், 3% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது என்றால், உயர் இரத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில் 45% பேருக்கு அது உண்டாகிறது.<br /><br />தடுக்கக் கூடிய இடர்க் காரணிகள் (Modifiable Risk Factors):<br /><br />அ) உடற் பருமன்: உடலின் எடை கூடக் கூட, உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாவதும் தவிர்க்க இயலாததாகிறது.<br /><br />ஆ) உணவில் உப்பின் அளவு: உணவில் உப்பை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுவதாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 7 - 8 கிராம் உப்பு என்பது உயர்ந்த அளவாகும். மிகப் பழங்காலத்தில் குறைந்த அளவு உப்பினை உட்கொண்ட நமது சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது கேள்விப்படாத நோயாக இருந்தது.<br /><br />இ) அன்றாட உணவுப் பழக்கம்: கொழுப்புப் பொருட்கள், குடிப்பழக்கம் ஆகியன உயர் இரத்த அழுத்தை ஊக்குவிக்கும் உணவுப் பழக்கங்களாகும்.<br /><br />ஈ) உடலுழைப்பு: தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் உடலின் எடை குறைவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.<br /><br />உ) பதற்ற நிலை: உளவியல் காரணங்களும், மன உளைச்சலும், மூளைக்குத் தரும் கடுமையான உழைப்பும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணங்களாக அமைகின்றன; எனவே அமைதி, மனக் கட்டுப்பாடு, ஆகியன மிகவும் இன்றியமையாதவை.<br /><br />உயர் இரத்த அழுத்தத்தினால் விளையும் சிக்கல்கள்:<br />மூளை வாத நோய் (Stroke): உயர் இரத்த அழுத்தத்தால், குருதிக் குழாயில் சேதமேற்பட்டு, மூளையில் குருதிப் போக்கு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நோயாகும்.<br />உயர் இரத்த அழுத்த மூளை நலிவு நோய் (Hypertensive Encephalopathy): பேச்சுக் கோளாறு, பார்வைக் கோளாறு, அசாதாரணப் புலனுணர்வு, வலிப்பு நோய், மனநிலை மாற்றம் ஆகிய நோய்களும், நரம்புத் தொடர்பான நோய்களும் இதன் காரணமாக உண்டாகும்.<br /><br />உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy): விழித்திரை அருகிலுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தக் கசிவும் ஏற்படும் வாய்ப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உண்டாகிறது.<br /><br />இதயக் கோளாறுகள் (Cardiac Complications): உயர் இரத்த அழுத்தம் என்பதே, இதயத்திற்குச் செல்லும் குருதி குறைபாட்டுக்கு வழிவகுக்கும் நோயாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இதனால் இடது வென்ட்ரிகல் விரிவடைந்து, இறுதியாக அது தன் பணியைச் செய்ய இயலாமல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடும்.<br /><br />சிறுநீரகப் பிரச்சினைகள் (Kidney Problems): நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் தனது பணியைச் செய்ய இயலாமல் பழுதடைந்து போவதற்கு வழி வகுக்கும்.<br /><br />உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை அளித்தல்:<br />உயர் இரத்த அழுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம், நோய்க்கு உரிய இடர்க் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு, நோயாளி நீண்ட நாள் வாழ வழி வகுத்தலே ஆகும். துணைநிலை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உரிய மருந்துகளைத் தருவதோடு, நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிற்கும் உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்த நோய் வராமலே தடுப்பதற்கான வருமுன் காக்கும் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுதல் நலம்.<br /><br />உணவு முறை: குடிப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல், சரியான உணவை உட்கொள்ளுதல் ஆகிய இரண்டும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவுப் பழக்கமாகும். கொழுப்புப் பொருட்களை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து நிறைந்த உணவு மிகவும் நல்லது. குறைந்த அளவு உப்பையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த, உப்பு மிகுந்த, தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.<br /><br />புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது.<br />உடற்பயிற்சியும், ஓய்வும்: (குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள், சுமார் 20 நிமிட நேரம்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் தேவையான ஒன்று; விரைந்து நடத்தல், நீச்சல் போன்றவை உடலைத் தகுதியாக வைத்துக்கொள்வதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க வழி வகுக்கும்.<br /><br />ஆழ்நிலைத் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவையும் இரத்த அழுத்ததைக் குறைக்கப் பயன்படுகின்றன. இவற்றால் உடலுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். ஆனால் இப்பயிற்சிகளின் வாயிலாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது; ஓரளவு மருந்தின் அளவையும், வீரியத்தையும் குறைக்கலாம்.<br /><br />உயர் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவமனைச் சோதனைகள்:<br />உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவரால் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து சில மருத்துவ நோயியல் ஆய்வுகளை அவ்வபோது நடத்துவது இன்றியமையாதது. அவை பின்வருமாறு:<br />குளுகோஸ், புரோட்டின், சிறுநீர்க் குருதி ஆகியவற்றிற்கான சிறுநீர் பகுப்பாய்வு<br />பிளாஸ்மா யூரியா மற்றும் கிரியேட்டினைன் ஆகியவற்றைத் தீர்மானித்தல்<br />பிளாஸ்மா கொழுவியம்/டிரைகிளிசரைட் ஆகியவற்றைத் தீர்மானித்தல்<br />மார்பின் எக்ஸ் ரே படம்<br />இதய மின்னியக்கப் பதிவு (Electrocardiograph - ECG)<br />பிளாஸ்மா எலெக்ட்ரோலைட்கள்<br /><br />உயர் இரத்த அழுத்தம் துவக்க காலத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருப்பதால், அதனைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். மிகுந்த சினம் கொள்வதும், அடிக்கடி தலைவலி வருவதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்பது உறுதி செய்யப்படாத நம்பிக்கை. ஆனால் சிகிச்சை பெறாத நிலையில், உயர் இரத்த அழுத்தம் பல்வேறு சிக்கல்களுக்கு வழியுண்டாக்கி, உடனிருந்து உயிரையே வாங்கிவிடும் என்பது மட்டும் உறுதி.<br /><br />தேவையான மருத்துவச் சிகிச்சை, முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, தகுந்த உடற்பயிற்சி ஆகியவை வாயிலாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இயல்பாக நீண்ட காலம் வாழ இயலும் என்பதில் ஐயமேதுமில்லை.<br /><br /><br />இரத்த அழுத்தம்<br />வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.<br /><br />அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்சன் என்ற மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல் அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு, ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது அறிக்கையில் (The seventh report of the joint national committee on prevention, detection, evaluation and treatment of high blood pressure – JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.<br /><br />உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட் கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.<br /><br />இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அதாவது ஒரே இடத்தில நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று பிரிட்டிஷ் உயர்ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்வர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.<br /><br />அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.<br /><br />உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.<br /><br />சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.<br /><br />ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary approach to stop hypertension study – DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட் கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.<br /><br />பொருத்தமான, தொடர்ச்சியான உடற் பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.<br /><br />மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.<br /><br />பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப் பட்டுள்ளது.<br /><br />ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.<br /><br />சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.<br /><br />ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.<br /><br />ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-62338738395334894062010-07-16T03:18:00.001-07:002010-07-16T03:20:31.308-07:00இருதய நோய்:இருதய நோய்:<br /><br />இன்று உலகளாவிய ரீதியில் மரணங்களை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இருதய நோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்நோயால் 17.2 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.<br /><br />ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் எனக் கருதப்பட்ட இந்நோய் இன்று வறியவர்களையும் பாதித்துள்ளது. முன்பு முதியோரையே தாக்கிய இந்நோய் இன்று சிறுவர்களையும், இளம் வயதினரையும் பாதித்துள்ளது.<br /><br />உலகளாவிய ரீதியில் ஏற்படும் மர ணங்கள் 75 சதவீதம் இருதய நோயால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்நோயால் மரணமடைகின்றனர்.<br /><br />2020 ஆம் ஆண்டளவில் இந்நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரிமாணமடையும் அபாயம் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவீனகால வாழ்க்கை முறை, உணவுமுறை, சூழல் மாசு அடைந்தமை, நீண்ட நேரம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்தல், கையடக்கத் தொலைபேசி பாவனை, போதிய உடற்பயிற்சியின்மை ஓய்வின்மை, மன உளைச்சல் போன்றவையே இதற்குக் காரணமாகும்.<br /><br />இருதயம் சீராகச் செயலாற்ற பிராண வாயு இரத்தம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) அடைப்பு ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்படும்போது போதிய பிராணவாயு இருதயத்தின் தசைகளுக்குக் கிடைக்காதபோது தான் மார்பு வலி (Angina) ஏற்படுகிறது.<br /><br />இது இருதய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையாகும். இக்குழாய்கள் அடைபட்டு இருதயத்திற்கான இரத்தோட்டம் முழுமையாகத் தடைப்படும் போதுதான் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.<br /><br />பல்வேறு காரணிகளால் மேற்படி முடிவுறுநாடிகளில் கொழுப்பு படிந்து தடித்து விடுவதால் அவற்றின் விட்டம் குறைந்து விடுகிறது. இதனால் அதனூடாகச் செல்லும் இரத்தோட்டம் பாதிக்கப்படுகிறது. போதிய பிராணவாயு கிடைக்காததால் மார்புவலி ஏற்படுகிறது.<br /><br />சிலவேலைகளில் இக்கொழுப்புப் படிவம் இரத்தக் குழாயிலிருந்து விடுபட்டு இரத்தத்துடன் கலந்து மிக மெல்லிய முடிவுறு நாடிகளுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தோட்டம் பூரணமாகத் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.<br /><br />மேற்படி இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து தடிப்பு ஏற்படுதல் தடுக்க முடியாத மற்றும் தடுக்கக் கூடிய இருவகைக் காரணிகளால் நடைபெறுகிறது. முதுமை, ஆண்பால், பரம்பரை, கறுப்பு இனம் போன்றவை தடுக்க முடியாத காரணிகளாகும்.<br /><br />சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்க வழக்கம், போதிய ஒட்சிசனெதிரி கள்(Antioxidants) அடங்கிய உணவை உட்கொள்ளாமை, மன உளைச்சல், உடற் பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்பு (Cholesterol) மற்றும் ரைகிளிசெனரட் (Triclycexide)என்ற கொழுப்பு, குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) , கூடிய அளவு கெட்ட கொழுப்பு (LDL) நீரிழிவு நோய், உடல் பருமன் எரிந்து விழுதல், தனிமை, பகமை, பேராசை, புகைத் தல், அதிக அளவு மதுப்பாவனை, நீண்டகால மருந்து பாவனை போன்றவை தடுக்கக்கூடிய காரணிகளாகும்.<br /><br />இவற்றில் மிக முக்கியமானது உயர் இரத்த அழுத்தமாகும். தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரை இந்த உயர் இரத்த அழுத்தம் நோய், பாதித்து ள்ளது. இந்நோய் தங்களிடம் இருப்பது பற்றி தெரியாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இதனால்தான் திடீரென எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பலர் மரண மடையும் பரிதாபகரமான நிலை ஏற்படுகிறது.<br /><br />மேலும், சிலர் மேற்படி தடுக்கக்கூடிய காரணிகளைக் கிரமமான பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு இரு தய நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என இருக்கும்போது அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சந்தர்ப்பம் உண்டு.<br /><br />மருத்துவர்களால் மேற் கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனையில் தான் அவர்களின் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை தொற்று நோயால்தான் மரணமடைந்தனர் என்பது தெரியவரும். இதுபோன்று இரத்தத்தில் கோமிசைடின் (Homoecystine) என்ற பொருள் அதிகரிக்கும் போதும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. தினமும் விட்டமின் சி அடங்கிய தோடம்பழச்சாறு அல்லது தேசிக்காய் சாறு பருகி விட்டமின் ஈ 200 iu எடுப்ப தன் மூலம் இது ஏற்படாது தடுக்க முடியும்.<br /><br />இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நாடிகளில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்ட த்தைக் குறைக்கும்.<br /><br />சிறு நீரகத்தின் (Kidney) மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) சுரக்கும் அட்ரீனாலின் (Adrenaline) என்ற சுரப்பு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய முடிவுறு நாடிக்குள் புகும்போது அதை அடைத்து இரத்தோட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும்.<br /><br />மேற்படி சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.<br /><br />இரத்தோட்டத்தில் இரத்த உறைகட்டிகள் (Blood Clots) தோன்றுவதற்கு உயர் கொலொஸ்ரோல் (Cholesterol) அளவு வழி வகுக்கிறது. இரத்தோட்டத்தில் கலந்து செல்லும் இவ் இரத்த உறை கட்டிகளும் மேல் கூறியவாறு முடிவுறு நாடிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும்.<br /><br />மேற்படி முடிவுறு நாடிகளில் ஏற்படும் கொழுப்புக்கட்டி படிமானம் திடீரென ஏற்படுவதில்லை. இது ஒன்பது வயதிலிருந்தே படிப்படியாக ஏற்படுகிறது எனச் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது ஏற்படாது தடுக்க முடியும்.<br /><br />அன்ஜைனா எனப்படும் மார்பு வலி ஒரு கிரேக்க மொழிச் சொல்லா கும். ‘உதவி கேட்டு இருதயம் அழுகிறது’ என்பது இதன் பொருளாகும். ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஏற்படும்.<br /><br />அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும் உணர்ச்சிவசப்படும்போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன் குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine என்ற சுரப்பை அதிகமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்படும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.<br /><br />ஆரோக்கியமான உணவுடன் உடற் பயிற்சி, மற்றும் யோகா போன்றவற்றை இளம் வயதிலிருந்தே மேற் கொண்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.<br /><br />இதனால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் இருதய நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என அறியக்கிடக்கிறது.<br /><br />மார்பின் மத்தியில் ஏற்பட்ட மெல்லிய வலி தீவிரமடைந்து இடது கைக்கு சில வேலைகளில் வலது கைக்கும், கீழத் தாடைக்கும் பரவுதல், குமட்டல் அல்லது வாந்தி, நெஞ்சில் முட்டு, மூச்சு நின்று விடுதல் அல்லது மெல்லிய மூச்சு, அதிக வியர்வை, பலவீனம், மயக்கம், தலைச்சுற்று, தொண்டைக்குள் அடைப்பு போன்றவை அன்ஜைனாவின் அறிகுறிகளாகும்.<br /><br />சிலவேளைகளில் வாய்வுக் கோளாறுகளினாலும் மேற்படி அறிகுறிகள் தென்படும். வாய்வுக் கோளாறு என கை மருத்துவம் பார்க்காது உடனடியாக மருத்துவமனைக்குப் போய் பரிசோதனைகளை மேற்கொண்டு அன்ஜைனா ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.<br /><br />மேற்படி அறிகுறிகள் தென்பட்டதும் முதல் உதவியாக GTN என்ற நாக்குக் கீழ் வைக்கும் மாத்திரை, ஆஸ்பிரின் எடுத்தால் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகலும். இவை கிடைக்காதபோது கடும் சாயத்துடன் சுடச் சுடப் பாலில்லாத தேனீர் பருக அடைப்பு ஓரளவு அகலும் என சமீபத்தில் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.<br /><br />மாரடைப்பு ஏற்பட்டதும் பதற்றமடையாது நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தை மருத்துவர்கள் தங்கமான நேரம் (Golden Hour) என்பர். இந்த ஒரு மணித்தியாலத்திற்குள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.<br /><br />சில சமயம் தனிமையில் ஒருவர் வெளியூருக்குக் காரோட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்படலாம். பக்கத்து மருத்துவமனைக்குப் போக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கலாம் என்ற நிலையில் அவர் சில முதலுதவிகளைத் தானே செய்யமுடியும்.<br /><br />நன்கு உட்கார்ந்துகொண்டு நெற்றியைக் கையால் தாங்கிக்கொண்டு வாந்தி எடுப்பது போல் ஆழமாக சிறிது நேரம் ஒலி எழுப்பிவிட்டு நிற்பாட்டி விட்டுச் சிறிது நேரம் ஆழமாகச் சுவாசம் எடுக்கவேண்டும். இதனால் இருதயம் பிடித்துவிடப்படுவதால் (Massagin) அது மீண்டும் துடிக்கும் சாத்தியம் ஏற்படும்.<br /><br />மேலும், ஆழ்ந்த சுவாசத்தின்போது அதிகபட்ச பிராணவாயு உட்செல்வதால் இருதயத்திற்கு போதிய பிராணவாயு கிடைத்து மீண்டும் இயங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் காலம் பிந்தி மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றாலும் அவர் உயிர்பிழைக்க முடியும்.<br /><br />பண்டிகைக் காலங்களில் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அளவுக்கு மீறிய மதுபாவனை, புகைத்தல், கொழுப்பு, உப்பு அதிக மடங்கிய உணவுகளை அளவிற்கு மீறி உட்கொள்ளல், போதிய ஓய்வின்றி இரவு முழுவம் நடனமாடுதல் போன்றவை மாரடைப்பை வரவழைக்கும் எனவே, இருதய நோயாளர்கள் இரவு விருந்துகளுக்குப் போகும்போது மறக்காது GNT மாத்திரையை எடுத்துச் செல்ல வேண்டும்.<br /><br />உணவுக் கட்டுப்பாடு, கிரமமான உடற் பயிற்சி மற்றும் யோகா, மன உளைச்சலைத் தவிர்த்தல், புகைத்தலை விட்டுவிடல், மிதமான மதுப்பாவனை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளல் போன்றவை மூலம் அன்ஜைனா ஏற்படாது தடுக்கலாம்.<br /><br />பாலூட்டும் பெண்களுக்கு இவ் ஆபத்து 19 சதவீதம் குறைவு என்றும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு எனவும் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.<br /><br />முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பெரிய மீன்கள், நெய், பட்டர், கொழுப்பு அடங்கிய பால், வித்துகள், உலர் பழங்கள் போன்றவை இரத்தத்தில் கொலொஸ்ரோலின் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கவேண்டும்.<br /><br />தானிய உணவு வகைகள் இருதய நோய் மருந்து போல் செயல்பட்டு மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் நார்ச்சத்து (Fibres) அடங்கிய உணவு வகைகளை உண்ண மாரடைப்பு 29 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது.<br /><br />தானிய உணவுகளுடன் கிரமமான யோகாவில் ஈடுபட்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றிலுள்ள நார்ப் பொருட்களும், விட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பேணும்.<br /><br />மத்தியத்தரை நாடுகளில் (Mediterranean) உள்ள மக்களுக்கு இருதய நோய் ஏற்படுதல் மிகக் குறைவு. அவர்களின் உணவில் மீன், ஒலிவ் எண்ணெய், வைன் அடங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். இருதய நோய் ஏற்படாது தடுக்கும் பல்வேறு ஒட்சிடனெதிரிகள் (antioxidants) இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ளன.<br /><br />புகைத்தலைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிவகைகள், பழங்கள் ஒட்ஸ் பயறு வகைகள், முழுத் தானிய வகைகள், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டு நடத்தல், துவிச்சக்கர வண்டி பதிதல், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்கமுடியும்.<br /><br />மேல் குறிப்பிட்டவாறு 2020 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை நோயாக இருதய நோய் பரிமாணமடைவதைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.<br /><br />இருதய நோயின் தாற்பரியத்தைக் கவனத்தில் கொண்டு இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு உலக இருதய நோய் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.<br /><br />விடுதலை நாளான இத்தினத்தில் பெரும்பாலான மக்கள் இத்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடைய முடியும். இவ்வருடம் இத்தினம் செப்டெம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ‘இதயத்திற்கு இணக்கமான வேலைத்தளம்’ என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.<br /><br />தொழில் புரிவோர் தங்களின் நேரத்தின் அதிக அளவை வேலைத்தளத்தில் செலவிடுகின்றனர். குடும்பத்தோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. வேலைத்தளத்திற்குப் பயணிக்கும்போது ஏற்படும் சனநெரிசல், காலதாமதம், மன உளைச்சலை அதிகரிக்கின்றன.<br /><br />வேலை செய்யும் இடமும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சிகரட் புகை அடங்கிய சூழல், காற்றோட்டமில்லாத குளிரூட்டியின் (Air Conditioner) கீழ் வேலை செய்தல், காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற கடினமான உத்தரவு, கொழுப்பு, உப்பு அதிகம் அடங்கிய சிற்றுண்டிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்துவதால் இருதய நோய் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவே தான் இத்தொனிப் பொருள் இந்த வருடம் கொடுக்கப்பட்டது.<br /><br />நவீன மருத்துவமுறையில் இருதய நோயாளர்கள் பல்வேறு தேவையற்ற பரிசோதனைகளுக்கும், செய்த பரிசோதனைகளைத் திரும்பவும் செய்தல் போன்றவற்றிற்க்கும் உட்படுத்தப்படுவதால் பெரும் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் பெரும்பணம் சம்பாதிக்கின்றன. இருதய வைத்திய நிபுணர்களும் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.<br /><br />ஆரோக்கியமான உணவை உட்கொண்டு கிரமமான யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பரம்பரை காரணிகள் உட்பட இருதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் அகன்று இருதயநோய் ஏற்படாது தடுக்க முடியும்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-501462393485692002010-07-16T03:16:00.000-07:002010-07-16T03:20:16.922-07:00இரத்தமும் இரத்த அழுத்தமும்இதயம்:<br /><br />இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம். <br />துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. <br />துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம். <br />இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதத் தொழிற்சாலை.<br /><br />ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான்.<br /><br />உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே.<br /><br />நாம் உட்கொண்ட உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் உணவு சமிபாடு அடைந்து; சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.<br /><br />இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது<br /><br /> <br />இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?<br /><br />இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.<br /><br />இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?<br /><br />ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.<br /><br />இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?<br /><br />எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.<br /><br />இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?<br /><br />ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.<br /><br />இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?<br /><br />இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.<br /><br />இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?<br /><br />உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.<br /><br />பிளாஸ்மா என்றால் என்ன?<br /><br />இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.<br /><br />இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?<br /><br />இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.<br /><br />இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?<br /><br />உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.<br /><br />உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?<br /><br />ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.<br /><br />மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?<br /><br />மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.<br /><br />உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?<br /><br />எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.<br /><br />இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?<br /><br />நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.<br /><br />24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?<br /><br />24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.<br /><br />தலசீமியா என்பது தொற்று நோயா?<br /><br />இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.<br /><br /><br />மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?<br /><br />மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.<br /><br />இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?<br /><br />ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.<br /><br />இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?<br /><br />இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.<br /><br />இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?<br /><br />இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.<br /><br />ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?<br /><br />செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.<br /><br />ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?<br /><br />கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.<br /><br />கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?<br /><br />கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.<br /><br />ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?<br /><br />ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.<br /><br />தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?<br />தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.<br /><br />தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?<br /><br />நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.<br /><br />இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?<br /><br />வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.<br /><br />யார் இரத்த தானம் செய்யக்கூடாது?<br /><br />உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.<br /><br />மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?<br /><br />இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.<br /><br />தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?<br /><br />புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.<br /><br />இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?<br /><br />நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.<br /><br />இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?<br /><br />இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-29458972093776828542010-07-16T03:01:00.000-07:002010-07-16T03:03:36.866-07:00பழங்களில் உள்ள சத்துகள்மாம்பழம்<br />வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.<br /><br />மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.<br /><br />ஆரஞ்சுப் பழம்<br /><br />வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.<br /><br />பப்பாளிப் பழம்<br /><br />வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.<br /><br />நெல்லிக்கனி<br /><br />வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.<br /><br />கொய்யாப்பழம்<br /><br />வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.<br /><br />சாத்துக்குடி<br /><br />வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.<br /><br />எலுமிச்சை<br /><br />கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.<br /><br />கறுப்பு திராட்சை<br /><br />வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.<br /><br />பச்சை திராட்சை<br /><br />வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.<br /><br />போ£ச்சம் பழம்<br /><br />இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.<br /><br />சப்போட்டா<br /><br />மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.<br /><br />வாழைப்பழம்<br /><br />கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.<br /><br />ஆப்பிள்<br /><br />வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.<br /><br />தர்பூசணி<br /><br />இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.<br /><br />புளி<br /><br />இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.<br /><br />சீத்தாப் பழம்<br /><br />பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.<br /><br />அண்ணாசிப் பழம்<br /><br />இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.<br /><br />மாதுளம் பழம்<br /><br />பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-14883934338419924912010-03-18T07:25:00.001-07:002010-03-18T07:34:00.045-07:00Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-33778823596613989042010-03-17T08:18:00.000-07:002010-03-17T08:19:29.168-07:00சிறப்பு வாய்ந்த மூன்று கோவில்கள் - திருநெல்வேலிதிருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள வடக்கு விஜயநாராயணம் புனிதமும் தொன்மையும் மிக்க தலமாகும். இங்கு சிறப்பு வாய்ந்த மூன்று கோவில்கள் அமைந்துள்ளன.<br /><br /><span style="font-weight:bold;">ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கோவில்</span><br /><br />மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டபோது, ஸ்ரீவியாசரின் அறிவுரைப்படி இங்கு வந்து தவமிருந்து, ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று இக்கோவிலைக் கட்டி, 1008 அந்தணர்களைக் குடியமர்த்தி இவ்வூரை உருவாக்கினான். அர்ஜுன னாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.<br /><br /><span style="font-weight:bold;">ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில்<br /></span><br />பிரம்ம தேவர் தாம் பூஜை செய்வதற் காக ஸ்ரீநாராயணரிடம் நேரில் பெற்ற பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகு மிக்க திருமேனியுடன் அருட்சக்தி மிக்கவராகக் காட்சியளிக்கிறார்.<br /><br /><span style="font-weight:bold;">ஸ்ரீமனோன்மணீச்வரர் கோவில்</span><br /><br />திருக்கயிலையில் பார்வதி தேவி உலக நலனுக் காக சிவபெருமானைத் தியானித்து 1008 தேவ தாமரை மலர்களைத் தூவினாள். சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி அம் மலர்களை ஏற்றார். அவ்விடங்கள் 1008 சிவ க்ஷேத்திரங்கள் ஆகின. இதில் மனோன்மணி லிங்கம் தோன்றிய இடம் விஜயநாராயணம் ஆகும். எனவே இத்தலம் மனோன்மணீச்வரம் என அழைக்கப்படுகிறது. இது 1008 சிவ க்ஷேத்திரங்களில் 74-ஆவது க்ஷேத்திரமாகும்.<br /><br />இத்திருக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவே ஒரு பொய்கையும் இருந்தது. இதன் கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய அந்தச் சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.<br /><br />“பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள் வதுபோல திருவருள் புரிகிறேன்’ என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம். பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும்.<br /><br />இங்கு அருள்புரியும் சிவபெருமானின் திரு நாமம் மனோன்மணீச்வரர் என்பதாகும். மனோன் மணி என்றால், “மனதில் நினைத்ததை அருள் கின்றவர்’ என்று பொருள். தேவலோகத்தில் உள்ள காமதேனு, சிந்தாமணி, கற்பக விருட்சம் போல, இங்கு வருகின்ற அனைத்து உலக மக்களுக் கும் நினைத்ததை அருளும் தலமாக இது விளங்கு கின்றது. இப்படி இந்தியாவில் உள்ள ஒரே திருக் கோவில் இது மட்டும்தான் என்கிறார்கள்.<br /><br />சிவபெருமான் பௌர்ணமி அன்று இங்கு தோன் றியதால் பௌர்ணமி பூஜை, க்ஷேத்திரவலம் மிகவும் விசேஷமானதாகும். பௌர்ணமியன்று இரவில் சப்தரிஷிகள் இன்றும் பூஜை செய்வதாக ஐதீகம். 21 சித்தர்கள் கோவிலைச் சுற்றித் தவமிருப்ப தாகவும், பௌர்ணமி, சிவராத்திரி ஆகிய நாட் களில் இரவு முழுவதும் இக்கோவிலை வலம் வந்து வணங்குவதாகவும் தலபுராணம் கூறுகிறது.<br /><br />ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.<br /><br />இங்குள்ள புனிதத் தீர்த்தமானது, சிவகங்கைத் தீர்த்தம் அல்லது மனோன் மணி தீர்த்தம் என வழங்கப்படுகிறது. கங்கையின் நேரடி ஊற்று இங்கு உள்ள தாகக் கூறப்படுகிறது. “நோய் நொடி களைத் தீர்க்கும் சக்தியுடையது இந்த தீர்த்தம்’ என்று வல்லநாடு சித்தர் சுவாமி கள் கூறுகிறார். ஒரு பிராமணப் பெண் கணவனோடு கங்கைக்குச் சென்றபோது கங்கையில் கணவனைப் பறிகொடுத்தாள். அவள் இங்கு வந்து சிவபெருமானைப் பூஜித்து வணங்கியபோது இத்தீர்த்தத்திலிருந்து கணவனை மீண்டும் பெற்றாள். அதாவது கங்கையில் மூழ்கி இறந்தவன் விஜயநாராயணம் சிவகங்கை தீர்த்தத்தில் உயிர்த்தெழுந்தான் என்று இத்தீர்த்தத்தின் பெருமையை அபிதான சிந்தாமணி கூறுகிறது.<br /><br />பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கி னால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். இந்தப் பேறுகளை அடைய பௌர்ணமியன்று இக்கோவிலை வலம் வாருங்கள்.<br /><br />ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டிய தலம் விஜயநாராயணம்!Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-11240196783765807682010-03-17T04:07:00.000-07:002010-03-17T04:09:21.408-07:00சைவத் திருமுறைகள்சைவத் திருமுறைகள்<br /><br /><br />சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.<br /><br />திருமுறைத் தொகுப்பு<br /><br />10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.<br /><br />திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.<br /><br />சைவத்திருமுறைகளின் பட்டியல்<br /><br />* முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)<br /><br />* இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)<br /><br />* மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)<br /><br />* நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)<br /><br />* ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)<br /><br />* ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)<br /><br />* ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)<br /><br />* எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்<br />o திருவாசகம்<br />o திருக்கோவையார்<br /><br />* ஒன்பதாம் திருமுறை:<br /> திருவிசைப்பா:<br /> திருமாளிகைத் தேவர்<br /> சேந்தனார்<br /> கருவூர்த்தேவர்<br /> பூந்துருத்திநம்பி காடநம்பி<br /> கண்டராதித்தர்<br /> வேணாட்டடிகள்<br /> திருவாலியமுதனார்<br /> புருடோத்தமநம்பி<br /> சேதிராசர்<br /> திருப்பல்லாண்டு<br /> சேதிராசர்<br />* பத்தாம் திருமுறை:<br /> திருமந்திரம் - திருமூலர்<br /><br />* பதினோராம் திருமுறை (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).<br /> திரு ஆலவாய் உடையார் இயற்றியவை:<br /> திருமுகப் பாசுரம்<br /> காரைக்கால் அம்மையார் இயற்றியவை:<br /> திருலாலங்காட்டுத் திருப்பதிகம்<br /> திரு இரட்டை மணிமாலை<br /> அற்புதத்திருவந்தாதி<br /> ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:<br /> சேத்திர வெண்பா<br /> சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:<br /> பொன்வண்ணத்தந்தாதி<br /> திருவாரூர் மும்மணிக்கோவை<br /> திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா<br /> நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:<br /> கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி<br /> திருஈங்கோய்மலை எழுபது<br /> திருவலஞ் சுழி மும்மணிக்கோவை<br /> பெருந்தேவபாணி<br /> கோபப் பிரசாதம்<br /> கார் எட்டு<br /> போற்றித் திருக்கலிவெண்பா<br /> திருமுருகாற்றுப்படை<br /> திருக்கண்ணப்ப தேவர் திருமறம்<br /> கல்லாட தேவ நாயனார் இயற்றியவை:<br /> திருக்கண்ணப்பதேவர் திருமறம்<br /> கபிலதேவ நாயனார் இயற்றியவை:<br /> மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை<br /> சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை<br /> சிவபெருமான் திருஅந்தாதி<br /> பரணதேவ நாயனார் இயற்றியவை:<br /> சிவபெருமான் திருவந்தாதி<br /> இளம் பெருமான் அடிகள் இயற்றியவை:<br /> சிவபெருமான் மும்மணிக்கோவை<br /> அதிரா அடிகள் இயற்றியவை:<br /> மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை<br /> பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:<br /> கோயில் நான்மணிமாலை<br /> திருக்கழுமல மும்மணிக்கோவை<br />திருவிடை மருதூர் மும்மணிக்கோவை<br /> திருவேகம்பமுடையார் திருவந்தாதி<br /> திருவொற்றியூர் ஒருபா ஒருபது<br /> நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:<br /> திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை<br /> கோயில் திருப்பண்ணியர் விருத்தம்<br /> திருத் தொண்டர் திருவந்தாதி<br /> ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி<br /> ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்<br /> ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை<br /> ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை<br /> ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்<br /> ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை<br /> திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை<br /><br />* பன்னிரண்டாம் திருமுறை<br />* பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்<br /><br />திருமுறை பாடிய சான்றோர்கள்<br />வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்<br />1. திருஞான சம்பந்தர் 1,2,3 4147<br />2. திருநாவுக்கரசர் 4,5,6 4066<br />3. சுந்தரர் 7 1026<br />4. மாணிக்கவாசகர் 8 1058<br />5. திருமாளிகை தேவர் 9 44<br />6. கண்டராதித்தர் 9 10<br />7. வேணாட்டடிகள் 9 10<br />8. சேதிராசர் 9 10<br />9. பூந்துருத்திநம்பி காடநம்பி 9 12<br />10. புருடோத்தமநம்பி 9 22<br />11. திருவாலியமுதனார் 9 42<br />12. சேந்தனார் 9 47<br />13. கருவூர்த்தேவர் 9 105<br />14. திருமூலர் 10 3000<br />15. திருவாலவாயுடையார் 11 1<br />16. கல்லாட தேவ நாயனார் 11 1<br />17. அதிரா அடிகள் 11 23<br />18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24<br />19. இளம் பெருமான் அடிகள் 11 30<br />20. பரணதேவ நாயனார் 11 101<br />21. சேரமான் பெருமான் நாயனார் 11 11<br />22. கபிலதேவ நாயனார் 11 157<br />23. காரைக்கால் அம்மையார் 11 143<br />24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192<br />25. நக்கீர தேவ நாயனார் 11 199<br />26. நம்பியாண்டார் நம்பி 11 382<br />27. சேக்கிழார் 12 4286<br /><br /><br />சைவத் திருமுறைகள்<br /><br />1, 2, 3. தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்<br />4, 5, 6. தேவாரம் திருநாவுக்கரசு நாயனார்<br />7. தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார்<br />8. திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்க வாசகர்<br />9. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகை தேவர் உட்பட 9பேர்<br />10. திருமந்திரம் திருமூலர்<br />11.பிரபந்த மாலை (நூல்கள் 40) காரைக்கால் அம்மையார் உட்பட 12வர்<br />12. பெரிய புராணம் சேக்கிழார்Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-53812731273603881262010-03-17T04:05:00.000-07:002010-03-17T04:07:48.683-07:00கோவில்கள் கலை<span style="font-weight:bold;">இந்தியக் கட்டிக் கலை</span> (கோவில்)<br /><br />* நாகரக்கலை<br />* வேசரக்கலை<br />* திராவிடர்கலை<br /><br />தமிழக கோவில்கள் பெரும்பாலும் திராவிடர் கலையை சேர்ந்தவை.<br /><br />கோவில்களின் கலையை, மன்னர்களின் ஆட்சி முறை அடிப்படையில், பிரெஞ்சு அறிஞர் துப்ராய் கீழ் கண்டவாறு பிரித்துள்ளார்.<br /><br />பல்லவர்கள் காலம் (கி.பி. 600-850) - குடைவரைகள்.<br /><br />முதற் சோழர்கள் காலம் (கி.பி. 850-1100) - விமானங்களின் காலம்.<br /><br />கடைசி சோழர்கள் காலம் (கி.பி. 1100-1350) - அழகிய கோபுரங்களின் காலம்.<br /><br />விஜயநகர காலம் (கி.பி. 1350-1600) - அழகிய மண்டபங்களின் காலம்.<br /><br />கி.பி. 1600-க்கு பிறகு - அழகிய பிரகாரங்களின் காலம்.<br /><br />காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் கோயில்கள் கலைக்கு ஓர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் மகேந்திரவர்மர் (கி.பி. 610-630). இவர்சிம்ம விஷ்ணுவின் மகன் (கி.பி. 575-610). மகேந்திரவர்மா காலத்தில் தான் தமிழகத்தில் பல இடங்களில், பல குடைவரைக் கோயில்கள் தோன்றின.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-1091100957019809272010-03-17T04:04:00.000-07:002010-03-17T04:05:13.723-07:00கோவில்கள்தோடுடை யசெவி யன்விடை யேறியோர்<br />தூவெண் மதிசூடிக்<br />காடுடை யசுட லைப்பொடி பூயென்<br />னுள்ளங் கவர்கள்வன்<br />ஏடுடை யமல ரான்முயை நாட்பணிந்<br />தேத்த அருள்செய்த<br />பீடுடை யபிர மாபுர மேவிய<br />பெம்மா னிவ னன்றே.<br />-தேவாரம்.<br /><br />தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ வழிபாடு” செய்வார்கள். நம் முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ வழிபாடு”.<br /><br />பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.<br /><br /><span style="font-weight:bold;">பெருங்கோயில் - மாடக் கோயில்</span><br /><br />குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.<br /><br /><span style="font-weight:bold;">கரக்கோயில்</span><br /><br />தேரைப் போன்ற அமைப்புள்ளது.<br /><br /><span style="font-weight:bold;">ஞாழற் கோயில்</span><br /><br />நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.<br /><br /><span style="font-weight:bold;">இளங்கோயில்</span><br /><br />பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.<br /><br /><span style="font-weight:bold;">மணிக்கோயில்</span><br /><br />மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.<br /><br /><span style="font-weight:bold;">கொகுடிக் கோயில்</span><br /><br />முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.<br /><br /><span style="font-weight:bold;">ஆலக்கோயில்</span><br /><br />ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-22009247907860035642010-02-28T22:53:00.000-08:002010-02-28T23:00:45.423-08:00பழமொழிஅறிய அறியக் கெடுவார் உண்டா?<br />அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.<br />அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.<br />அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.<br />அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.<br />அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.<br />அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.<br />அறுதாலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை<br />அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி<br />அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.<br />அற்ப அறிவு அல்லற்கிடம்.<br />அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.<br />அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.<br />அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.<br />அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்.<br />யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.<br />யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.<br />யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?<br />வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.<br />வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.<br />வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது<br />விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.<br />வித்தைக்கு அழிவில்லை.<br />விரலுக்குத் தகுந்த வீக்கம்.<br />விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா விறகால ரெண்டு போடு<br />விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்<br />விளையும் பயிர் முளையிலே தெரியும்<br />வீட்டுப் பெஞ்சாதி வேம்பு; நாட்டுப் பெஞ்சாதி கரும்பு<br />வீண் இழவாம் வெங்காயம்; உரிக்க உரிக்கப் பேரிழவாம்.<br />வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.<br />வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.<br />வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .<br />வெளுத்ததெல்லாம் பாலல்ல.<br />வேக நேரமிருந்தாலும் சாக நேரமில்லை.<br />வேலிக்கு ஓணான் சாட்சி.<br />வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு<br />வைக்கோற் போர் நாய் போல.<br />உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.<br />உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.<br />உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?<br />உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.<br />உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.<br />உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.<br />உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.<br />உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.<br />உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.<br />உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.<br />உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு இல்லை; காரியத்துக்கு கால் வீசை நெய்யாம்.<br />உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?<br />உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.<br />உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.<br />உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.<br />உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்<br />உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவதுபோல்<br />உலோபிக்கு இரட்டை செலவு.<br />உளவு இல்லாமல் களவு இல்லை.<br />உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா ?<br />உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.<br />உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.<br />ஊசியைக் காந்தம் இழுக்கும்; உத்தமனை நட்பு இழுக்கும்.<br />ஊணுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.<br />ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு<br />ஊரார் பண்டம் உமிபோல்; தன் பண்டம் தங்கம் போல.<br />ஊரார் வீட்டு நெய்யே , என் பெண்டாட்டி கையே.<br />ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி<br />ஊரை வளைத்தாலும் உற்ற துணையில்லை; நாட்டை வளைத்தாலும் நல்ல துணையில்லை.<br />ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள<br />ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.<br />ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி<br />ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-80420537569902664052010-02-28T20:45:00.000-08:002010-02-28T20:47:49.377-08:00ஞானிகள்பழம்பெரும் ஞானிகள்<br />நம்மால்<br />புரிந்து கொள்ள<br />முடியாதவர்கள்<br />திகைப்பூட்டுபவர்கள்<br />ஆழமும், நுட்பமும் நிறைந்த<br />மேதைகள்.<br /><br />சமூதாயத்தில் எங்கு பார்த்தாலும்<br />இல்லாமை இருப்பது போல -<br />கனிவான உள்ளம்.<br />பனிக்கட்டி உருகத்<br />தயாராயிருப்பது போல<br />அடக்கம்.<br />கல்யாண வீட்டில் ஆசி கூற<br />வந்தவர் போல -<br />எளிமை.<br /><br />உளியினால் தொடப்படாத<br />மரம் போல -<br />திறந்த மனம்.<br />பரந்து கிடக்கும்<br />பள்ளத்தாக்கு போல்.<br /><br /><br />ஒடுவதோ கலங்கிய சேறாக<br />அடங்கியவுடன் தெரிவதோ<br />தெளிந்த நீராக,<br />இருப்பதோ அமைதியாக,<br />பழகுவதோ சான்றோராக,<br />சகஜமாக.<br /><br />அவ்வளவு கவனம் -<br />ஓடையின் குறுக்கே<br />பனிக்காலத்தில்<br />பனிப்படலம் மீது<br />நடப்பவனைப் போல் -<br />மென்மையான பெருந்தன்மை.<br /><br />பிரபஞ்ச இயக்கத்தில்<br />ஒன்றியவர்கள் இன்னும்<br />வேண்டும் என்ற<br />ஆசை இல்லாதவர்கள்.<br />நிரம்பாமலிருந்தாலும் எடுக்க<br />எடுக்கக் குறையாத<br />நில ஊற்றுப் போல!Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-17911638457890709912010-02-26T09:09:00.001-08:002010-02-26T09:09:57.707-08:00மனித அறிவை மிஞ்சும் கணணி 2020குள் வரும்மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்பியூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.<br /><br />'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.<br /><br />தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.<br /><br />மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-53345987930265216292010-02-26T08:56:00.001-08:002010-02-26T08:56:14.977-08:00இதுதான் உலகம் ...இதுதான் உலகம் ...<br />"நன்றி உள்ளவர்கள் சிலர்,<br />நயவஞ்சகர்கள் பலர்,<br /><br />பாசமுள்ளவர்கள் சிலர்,<br />பாசாங்கு செய்வோர் பலர்,<br /><br />அன்புள்ளவர்கள் சிலர்,<br />அடக்கு முறை செய்வோர் பலர்,<br /><br />தித்திப்பாய் பேசுவோர் சிலர்<br />திட்டுவோர் பலர்,"<br /><br />உதவ எண்ணமுள்ளோர் சிலர்,<br />கைவிரிபோர் பலர்,<br /><br />நம்மை பிடித்தோர் சிலர்,<br />வெறுப்போர் பலர்,<br /><br />நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,<br />எதிர் பார்போர் பலர்,<br /><br />நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,<br />பொறாமை கொள்வோர் பலர்..<br /><br />நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,<br />மகிழ்ச்சி அடைவோர் பலர்....<br /><br />உற்று நோக்குவோம் உள்ளத்தை,<br />உடைத்தெறிவோம் அகந்தையை,<br /><br />முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக,<br />உதவுபவனாக,<br />வாழ்வோம் நமக்காக...Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-75919619189286080132010-02-26T08:55:00.001-08:002010-02-26T08:55:20.377-08:00அன்பின் இருப்பிடமே…அன்பின் இருப்பிடமே…<br />என்னவளே, பிரியமானவளே, நேசத்திற்குரியவளோ<br />என்னை நான் உணரவைத்த அன்புக்குரியவளே<br />என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி<br />எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ<br />என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே<br /><br />பிரிவென்பது நமக்கில்லை இரண்டென்பதும் நமக்கில்லை<br />அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே<br />கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே<br />கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே<br /><br />வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே<br />வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே<br />வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற<br />வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் இருப்பாயோ<br /><br />அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே<br />அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது<br />அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் வசந்தமே<br />அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-6519593629307775392010-02-26T08:54:00.001-08:002010-02-26T08:54:26.139-08:00உன் நினைவுகள்...!மழையாய்...<br />வரும் கவியில்.<br />உன் நினைவுகள்...<br />நனைகிறது.<br /><br />வானில் மிளிரும்...<br />விண்மீன்கள்<br />பூக்களாய் மாறி...<br />உன்பாதம் தொடுகிறது.<br /><br />தேரில்...<br />வரும் சிலையில்.<br />உன் விம்பம்...<br />தெரிகிறது.<br /><br />தென்றல் வந்து...<br />மோதியதால்<br />பாலைவனம்...<br />சோலைவனமாய் மாறியது.<br /><br />உனக்கும்...<br />எனக்கும் இடையில்<br />எம் சுவாசக்காற்றுகள்...<br />காதலிக்கின்றது.<br /><br />நதி போல்...<br />வரும் உறவில்.<br />வாழ்ந்து காட்டுவோம்...<br />விரைவில்.<br /><br />நாளை மலர...<br />விரும்பா விடியல்.<br />நமக்காய்...<br />இரவாய் தொடர்கிறது.<br /><br />நீ பேசுகின்ற...<br />இனிமை கண்டு<br />தமிழ் மொழிக்கே...<br />மகிமை இன்று.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-15996373355091046162010-02-24T00:52:00.000-08:002010-02-24T00:55:25.032-08:00நவக்கிரக கோயில்அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்<br /> அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி<br /> அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்<br /> அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்<br /> அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர்<br /> அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, திருவாரூர்<br /> அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர்<br /> அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்<br /> அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை, மதுரை<br /> அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை, மதுரை<br /> அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை<br /> அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை<br /> அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு<br /> அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம்<br /> அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, கர்நூல்<br /> அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர்<br /> அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம்<br /> அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம்<br /> அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர்<br /> அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர்<br /> அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்<br /> அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்<br /> அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி<br /> அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம் (வரகுணமங்கை), தூத்துக்குடி<br /> அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி<br /> அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி<br /> அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர், தூத்துக்குடி<br /> அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை, தூத்துக்குடி<br /> அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை<br /> அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர், விழுப்புரம்<br /> அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி<br /> அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்<br /> அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை<br /> அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை<br /> அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, திருவாரூர்<br /> அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம், மதுரை<br /> அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர்<br /> அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்<br /> அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு<br /> அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம்<br /> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர், திருநெல்வேலி<br /> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, திருநெல்வேலி<br /> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி<br /> அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம்<br /> அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி<br /> அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை<br /> அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி., தேனி<br /> அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை, மதுரை<br /> அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்<br /> அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இருகூர் - ஒண்டிப்புதூர்,, கோயம்புத்தூர்Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2568162427309070683.post-51480159747500054962010-02-13T02:12:00.000-08:002010-02-13T02:13:03.728-08:00கந்தர் சஸ்டி கவசம்<span style="font-weight:bold;">கந்தர் சஸ்டி கவசம்</span><br /><br />காப்பு<br />நேரிசை வெண்பா<br /><br />துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்<br />பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;<br />நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்<br />சஸ்டி கவசந் தனை.<br /><br />குறள் வெண்பா<br /><br />அமரர் இடர் தீர அமரம் புரிந்த<br />குமரன் அடி நெஞ்சே குறி<br /><br />நூல்<br />நிலை மண்டில ஆசிரியப்பா<br /><br />சஸ்டியை நோக்கச் சரவண பவனார்<br />சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்<br />பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை<br />கீதம் பாடக் கிண் கிணி யாட<br />மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்<br /><br />கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து<br />வர வர வேலா யுதனார் வருக !<br />வருக ! வருக! மயிலோன் வருக!<br />இந்திரன் வடிவேல் வருக! வருக!<br /><br />வாசவன் மருகா! வருக! வருக!<br />நேச குறமகள் நினைவோன்! வருக!<br />ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!<br />நீறு இடும் வேலவன் நித்தம் வருக!<br />சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!<br /><br />சரஹண பவனார் சடுதியில் வருக!<br />ரஹண பவச, ரரரர ரரர<br />ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி<br />விணபவ சரஹ,வீரா நமோ நம!<br />நிபவ சரஹண நிற நிற நிர்றென<br /><br />வசர ஹணப வருக வருக!<br />அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!<br />என்னை ஆளும் பாசாங் குசமும்<br />பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க<br /><br />விரைந்து என்னை காக்க வேலோன் வருக !<br />ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,<br />உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,<br />கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்<br />நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்<br /><br />சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்<br />குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !<br />ஆறு முகமும், அணிமுடி ஆறும்<br />நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,<br />பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,<br /><br />நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,<br />ஈரறு செவியில் இலகு குண்டலமும்<br />ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்<br />பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து<br />நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்<br /><br />முப்புரி நூலும், முத்து அணி மார்பும்<br />செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,<br />துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,<br />நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,<br />இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,<br /><br />திருவடி யதனில் சிலம் பொலி முழங்க<br />செககண செககண செககண செககண<br />மொகமொக மொகமொக மொகமொக மொககென<br />நகநக நகநக நகநக நகென<br />டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண<br /><br />ரரரர ரரரர,ரரரர ரரரர<br />ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி<br />டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு<br />டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு<br />விந்து விந்து, மயிலோன் விந்து<br /><br />முந்து முந்து,முருகவேள் முந்து<br />என்றனை ஆளும் ஏரகச் செல்வ !<br />மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்<br />லாலா லாலா லாலா வேசமும்<br />லீலா லீலா லீலா விநோதன் என்று,<br /><br />உந்திரு வடியை உருதியென்று எண்ணும்<br />எந்தலை வைத்து உன் இணையடி காக்க!<br />என் உயிர்க்கு இறைவன் காக்க!<br />பன்னிரு விழியால் பாலனைக் காக்க!<br />அடியேன் வதனம் அழகுவேல் காக்க!<br /><br />பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!<br />கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!<br />விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!<br />நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!<br />பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!<br /><br />முப்பத்து இருபல் முனைவேல் காக்க!<br />செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!<br />கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!<br />என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!<br />மார்பை இரத்ந வடிவேல் காக்க!<br /><br />சேரிள முலைமார் திருவேல் காக்க!<br />வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!<br />பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!<br />அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!<br />பழு பதினாறும் பருவேல் காக்க!<br /><br />வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!<br />சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!<br />நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!<br />ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!<br />பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!<br /><br />வட்டக் குதத்தை வல்வேல் காக்க!<br />பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!<br />கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!<br />ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!<br />கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!<br /><br />முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!<br />பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!<br />நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,<br />நாபிக் கமலம், நவ்வேல் காக்க!<br />முப்பால் நாடியை முனைவேல் காக்க!<br /><br />எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!<br />அடியேன் வசனம் அசைவுள நேரம்<br />கடுகவே வந்து, கனகவேல் காக்க!<br />வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!<br />அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!<br /><br />ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!<br />தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!<br />காக்க காக்க கனகவேல் காக்க!<br />நோக்க நோக்க நொடியில் நோக்க!<br />தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!<br /><br />பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,<br />பில்லி சூனியம் பெரும்பகை அகல,<br />வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,<br />அல்லல் படுதும் அடங்கா முனியும்<br />பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்<br /><br />கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,<br />பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்<br />அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!<br />இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்<br />எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,<br /><br />கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,<br />விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்<br />தண்டியக் காரரும், சண்டாளர்களும்<br />என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,<br />ஆனை அடியினில், அரும்பா வைகளும்<br /><br />பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,<br />நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்<br />பாவைகள் உடனே, பலகல சத்துடன்<br />மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,<br />ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,<br /><br />காசும், பணமும், காவுடன் சோறும்,<br />ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,<br />அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,<br />மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,<br />கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,<br /><br />ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,<br />வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,<br />படியினில் முட்டப், பாசக் கயிற்றால்<br />கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!<br />கட்டி உருட்டு, கால்கை முறியக்<br /><br />கட்டு கட்டு, கதறிடக் கட்டு!<br />முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;<br />செக்கு செக்கு செதில் செதிலாக;<br />சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;<br />குத்துக் குத்து கூர்வடி வேலால்;<br /><br />பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;<br />தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;<br />விடுவிடு வேலை, வெருண்டது ஒட;<br />புலியும் , நரியும், புன்னரி நாயும்<br />எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,<br /><br />தேளும், பாம்பும், செய்யான் பூரான்,<br />கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்<br />ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,<br />ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்<br />வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்<br /><br />சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு<br />குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி<br />பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,<br />கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,<br />பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,<br /><br />எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்<br />நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!<br />ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக<br />ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,<br />மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,<br /><br />உன்னைத் துதிக்க, உன் திருநமம்<br />சரஹண பவனே! சையொளி பவனே!<br />திரிபுர பவனே! திகழொளி பவனே!<br />பரிபுர பவனே! பவன் ஓழி பவனே!<br />அரிதிரு மருகா! அமரா பதியைக்<br /><br />காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!<br />கந்தா ! குகனே! கதிர் வேளவனே!<br />கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,<br />இடும்பனை அழித்த இனியவேள் முருகா<br />தணிகாசலனே ! சங்கரன் புதல்வா!<br /><br />கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,<br />பழநி பதிவாழ் பால குமாரா!<br />அவினனகுடி வாழ் அழகிய வேலா!<br />செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!<br />சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!<br /><br />காரார் குழலாள் கலைமகள், நன்றாய்<br />என்நா இருக்க, யான் உனைப் பாட,<br />எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்<br />பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;<br />ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை<br /><br />நேசமுடம் யான் நெற்றியில் அணியப்,<br />பாச வினைகள் பற்றது நீங்கி,<br />உன்பதம் பெறவே, உன் அருள் ஆக<br />அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்<br />மெத்த மெத்தாக, வேலா யுதனார்<br /><br />சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!<br />வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!<br />வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!<br />வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!<br />வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்<br /><br />வாழ்க வாழ்க வாரணத் துவசம்!<br />வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,<br />எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,<br />எத்தனை அடியென் எத்தனை செய்தால்<br />பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:<br /><br />பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!<br />பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,<br />மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்<br />தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!<br />கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய<br /><br />பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்<br />கலையில் மாலையில் கருத்துடன், நாளும்<br />ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,<br />நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்<br />கந்தர் சஷ்டி கவசம் இதனைச்<br /><br />சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,<br />ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,<br />ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,<br />அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்<br />திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;<br /><br />மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;<br />நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;<br />நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்ல்<br />எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;<br />கந்தர்கை வேலாம் கவசத்து அடியை<br /><br />வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;<br />விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;<br />பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;<br />நல்லோர் நினைவில் நடனம் புரியும்;<br />சர்வ சத்துரு சங்கா ரத்து அடி<br /><br />அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்<br />வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்<br />சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,<br />இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த<br />குருபரன் , பழநிக் குன்றினில் இருக்கும்<br /><br />சின்னக் குழந்தை சேவடி போற்றி!<br />எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்<br />மேவிய வடிவுறும் வேலவ போற்றி!<br />தேவர்கள் சேனா பதியே போற்றி!<br />குறமகள் மனமகிழ் கோவே போற்றி!<br /><br />திறமிகு திவ்விய தேகா போற்றி!<br />இடும்பா யுதனே, இடும்பா போற்றி!<br />கட்மபா போற்றி கந்தா போற்றி!<br />வெட்சி புனையும் வேளே போற்றி!<br />உயர்கி கனக சபைக்கும் ஓர் போற்றி!<br /><br />மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;<br />சரணம் சரணம் சரஹண பவஓம்,<br />சரணம் சரணம் சண்முக சரணம்.Sivaguru Sivasithanhttp://www.blogger.com/profile/07631932366094800532noreply@blogger.com0